செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே விவசாயியை தாக்கிய வாலிபர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே விவசாயியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த தலையாரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45). விவசாயி. இவரை அதே பகுதியை சேர்ந்த அஜித் என்கிற அஜித்குமார் (26) தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று இரவு அஜித்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.