உள்ளூர் செய்திகள்
கருமத்தம்பட்டி அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது
2 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
கருமத்தம்பட்டி:
கருமத்தம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் நேற்று கணியூர் சுங்கச்சாவடி பகுதியில் வழக்கமான வாகன சோதனையில் ஈடு-பட்டி ருந்தனர். அப்போது 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து மோட்டார் சைக்கிளில் சோதனை செய்தனர். அப்போது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.
இதையடுத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
விசார¬ணையில் அவர்கள் கிருஷ்ணாபுரம் பூலக்காடை சேர்ந்த முருகன்(40), விமல்ராஜ்(21) என்பது, தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
இதேபோன்று கருமத்தம்பட்டி அடுத்த வடுகன் காளிபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அந்த வழியாக வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர் சோமனூர் சேடபாளையத்தை சேர்ந்த சிவன் பாண்டியன் (35) என்பதும், கஞ்சா விற்க வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து 2 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் முருகன் என்பவர் ஏற்கனவே கஞ்சா விற்று கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து கருமத்தம்பட்டி, சோமனூர் பகுதிகளில் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது