ஆன்மிகம்
மணக்குடி நல்லதாயார் அம்மன் கோவிலில் பால்குட விழா
மயிலாடுதுறை நல்லதாயார் அம்மன் கோவிலில் பால்குட விழா நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு காவடி எடுத்து வந்தவர்களுக்கு தீபாராதனை காட்டி வணங்கினர்.
மயிலாடுதுறை அருகே மணக்குடியில் தை அமாவாசையையொட்டி நல்லதாயார் அம்மன் கோவிலில் பால்குட விழா நடைபெற்றது. விழாவையொட்டி காவிரி ஆற்றங்கரையில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.
மேலும் பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டங்களுடன் மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் வீதியுலா சென்றனர். அப்போது பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு காவடி எடுத்து வந்தவர்களுக்கு தீபாராதனை காட்டி வணங்கினர். முக்கிய வீதிகள் வழியாக பால் காவடி சுமந்து வந்த பக்தர்கள் கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர் நல்லதாயார் அம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நல்ல தாயார் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மணக்குடி கிராம மக்கள் செய்து இருந்தனர்.
மேலும் பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டங்களுடன் மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் வீதியுலா சென்றனர். அப்போது பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு காவடி எடுத்து வந்தவர்களுக்கு தீபாராதனை காட்டி வணங்கினர். முக்கிய வீதிகள் வழியாக பால் காவடி சுமந்து வந்த பக்தர்கள் கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர் நல்லதாயார் அம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நல்ல தாயார் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மணக்குடி கிராம மக்கள் செய்து இருந்தனர்.