ஆன்மிகம்
புனித பார்பராள்

புனித பார்பராள் ஆலய தேர்பவனி

Published On 2021-09-08 04:31 GMT   |   Update On 2021-09-08 04:31 GMT
முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள பார்பரம்மாள்புரம் புனித பார்பராள் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேவமாதா மற்றும் புனித பார்பராள் தேர்பவனி நடைபெற்றது.
முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள பார்பரம்மாள்புரம் புனித பார்பராள் ஆலய திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் பங்குதந்தை விக்டர் தலைமையில் திருவிழா மாலை சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

இரவு தேவமாதா மற்றும் புனித பார்பராள் தேர்பவனி நடைபெற்றது. விழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். திருவிழா நிகழ்ச்சிகளை அரசு வழிகாட்டுதல்படி பங்குதந்தை டக்ளஸ் செய்து இருந்தார்.
Tags:    

Similar News