செய்திகள்
மாதப்பன்

கடம்பூர் அருகே கஞ்சா விற்றவர் கைது

Published On 2021-02-27 15:27 GMT   |   Update On 2021-02-27 15:27 GMT
கடம்பூர் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனை செய்த நபரை கைது செய்தனர்.
டி.என்.பாளையம்:

கடம்பூர் அருகே உள்ள அணைக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக கடம்பூர் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் கடம்பூர் போலீசார் அணைக்கரை பகுதியில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ்நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். போலீசார் உடனே அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்

அணைக்கரை அருகே உள்ள கிணத்துதொட்டியை சேர்ந்த மாதப்பன் (வயது 41) என்பதும், 1 கிலோ கஞ்சாவை பொட்டலமாக கட்டி விற்பனை செய்ய நின்றுகொண்டு இருந்ததும் தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து மாதப்பனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தார்கள்.
Tags:    

Similar News