செய்திகள்
பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற டிரைவர் பலி

Published On 2021-09-18 10:28 GMT   |   Update On 2021-09-18 10:28 GMT
நீடாமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற டிரைவர் பலியானார்.
நீடாமங்கலம்:

நீடாமங்கலம் அருகே உள்ள கோவில்வெண்ணி வடக்கு தெருவை சேர்ந்தவர் சக்திவேல் மகன் அருண்குமார் (வயது 25). டிரைவரான இவர், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் ஆதனூர் கடை வீதிக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நீடாமங்கலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான அருண்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News