செய்திகள்
ரெயில்வே பணியாளர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸ் - மத்திய மந்திரி அறிவிப்பு
ரெயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 78 நாள்கள் சம்பளம் போனசாக வழங்கப்படும் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி:
மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மத்திய மந்திரி சபை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் ரெயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில், ரெயில்வே துறையில் பணிபுரியும் சுமார் 11.52 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் போனசாக வழங்க முடிவானது.
கடந்த 6 ஆண்டுகளாக 78 நாட்கள் ஊதியத்தை மத்திய பாஜக அரசு போனசாக வழங்கி வருகிறது என தெரிவித்துள்ளார்.