உள்ளூர் செய்திகள்
சிவகாசி சித்திரை திருவிழாவில் பிரம்மாண்ட சாமி ஊர்வலம் நடந்தது.
சிவகாசி
சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. 3-ம் நாளான நேற்று நடந்த திருவிழாவில் காளீஸ்வரி மற்றும் கல்லூரி குழுமம் சார்பில் நடைபெற்ற திருவிழாவில் பிரம்மாண்டமான ஊர்வலம் நடைபெற்றது.
இதில் கேரளாவின் பாரம்பரியமிக்க பஞ்ச வாத்தியங்கள் முழங்கியும், ஸ்ரீகிருஷ்ணா காளிங்க நர்த்தனம், மற்றும் அர்த்தநாரீஸ்வரர் நர்த்தனம், ஸ்ரீவிநாயகர், சம்கார பைரவி, பிரம்மாண்டமான சிலை ஊர்வலம் தனித்தனி வாகனங்களில் தத்ரூ பமான காட்சிகளாக சிறப்பு ஒலி-ஒளியுடன் கூடிய அழகு ரதங்கள் முன்செல்ல பத்திரகாளி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் நகர்வலம் 4 ரத வீதிகளில் நடந்தது.
காளீஸ்வரி இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் டெக்னாலஜி மற்றும் காளீஸ்வரி கல்லூரி, காளீஸ்வரி குடும்பத்தினர் சார்பில் கல்லூரி செயலாளர் செல்வராஜன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சிவகாசியில் நடைபெற்ற இந்த பிரம்மாண்டமான ஊர்வலம் இரவு 8 மணிக்கு தொடங்கி 10 மணிக்கு நிறைவடைந்தது.
அதனைத் தொடர்ந்து சிவகாசி இந்து நாடார் பெண்கள் மேல்நிலைப்ப ள்ளி மைதானத்தில் லட்சுமணன் சுருதி இன்னிசை நிகழ்ச்சியை திரளானோர் கண்டுகளித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ காளீஸ்வரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.