செய்திகள்
திமுக பொருளாளர் துரைமுருகன் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதி
தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுக்கு இன்று அதிகாலையில் ரத்த அழுத்தம் அதிகமானதால் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:
தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துரைமுருகன் ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். அவருக்கு அடிக்கடி ரத்த அழுத்தம், சளித்தொல்லை, மூச்சு திணறல் வருவது வழக்கம்.
உடனே அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை எடுத்து கொண்டு வீடு திரும்புவார்.
இன்று அதிகாலையில் துரைமுருகனுக்கு ரத்த அழுத்தம் அதிகமானதால் அவரது உடல் சோர்வானது. மூச்சு விட சிரமப்பட்டார்.
உடனே அவரது உதவியாளர்கள் குடும்ப டாக்டருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் உடனடியாக துரைமுருகன் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை மேற்கொண்டனர். ரத்த அழுத்தம், இ.சி.ஜி. போன்ற பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதுபற்றி டாக்டர்கள் கூறுகையில், துரைமுருகன் தற்போது நலமாக இருப்பதாகவும், இன்று வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்.
தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துரைமுருகன் ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். அவருக்கு அடிக்கடி ரத்த அழுத்தம், சளித்தொல்லை, மூச்சு திணறல் வருவது வழக்கம்.
உடனே அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை எடுத்து கொண்டு வீடு திரும்புவார்.
இன்று அதிகாலையில் துரைமுருகனுக்கு ரத்த அழுத்தம் அதிகமானதால் அவரது உடல் சோர்வானது. மூச்சு விட சிரமப்பட்டார்.
உடனே அவரது உதவியாளர்கள் குடும்ப டாக்டருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் உடனடியாக துரைமுருகன் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை மேற்கொண்டனர். ரத்த அழுத்தம், இ.சி.ஜி. போன்ற பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதுபற்றி டாக்டர்கள் கூறுகையில், துரைமுருகன் தற்போது நலமாக இருப்பதாகவும், இன்று வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்.