செய்திகள்
சிகிச்சையை விளக்கும் டாக்டர்

பிரேசிலை விடாத கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 60 லட்சத்தை கடந்தது

Published On 2020-11-22 00:17 GMT   |   Update On 2020-11-22 00:17 GMT
பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60 லட்சத்தைக் கடந்துள்ளது.
ரியோ டி ஜெனிரோ:

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசில் 3-ம் இடத்தில் உள்ளது.

பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று 38,397 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60 லட்சத்தைக் கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 662 ஆக உள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 54.22 லட்சத்தைக் கடந்துள்ளது. சுமார் 4.60 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News