செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு கொரோனா உறுதி
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 398 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 79 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 26 ஆயிரத்து 77 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் மேலும் 70 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இவர்களில் கொல்கத்தா, இமாச்சல பிரதேசத்தில் இருந்து என்.எல்.சி.க்கு வந்த 2 பேர், சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த் தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 29 பேர், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 39 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 344 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்ற நிலையில், நேற்று 34 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 398 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 79 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 15 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 26 ஆயிரத்து 77 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் மேலும் 70 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இவர்களில் கொல்கத்தா, இமாச்சல பிரதேசத்தில் இருந்து என்.எல்.சி.க்கு வந்த 2 பேர், சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த் தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 29 பேர், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 39 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 344 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்ற நிலையில், நேற்று 34 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 398 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 79 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 15 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.