செய்திகள்
ஊரடங்கு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த 13 பேர் மீது வழக்கு
ஊரடங்கு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல்:
கரூர் மாவட்டம் சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தவுட்டுப்பாளையத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடியில் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி தலைமையிலான போலீசார் ஊரடங்கை மீறி வாகனம் எதுவும் இயக்கப்படுகிறதா? என்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மூர்த்திபாளையத்தை சேர்ந்த ஜீவா(வயது 20), பரமத்திவேலூர் நல்லியாம்பாளையத்தை சேர்ந்த ராஜசேகர் (29), வேலாயுதம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்த கலியமூர்த்தி (45), காகித ஆலை செல்லும் சாலை பகுதியைச் சேர்ந்த சாகுல்அமீது (27), பரமக்குடி பகுதியை சேர்ந்த சரத்குமார் (25), பரமத்திவேலூர் நல்லியாம்பாளையத்தை சேர்ந்த மணி (52), பரமத்திவேலூர் கொந்தளம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (42), வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த கோபிநாத் (31), வெண்ணைமலையைச் சேர்ந்த குமார்(61), நடையனூர் வெள்ளதாரை பகுதியைச் சேர்ந்த கோகுல்நாத் (23) உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.