செய்திகள்
கள்ளுக்கடை மேடு பகுதியில் நாளை மின் நிறுத்தம்
கள்ளுக்கடை மேடு பகுதியில் நாளை கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
ஈரோடு:
காசிபாளையம் 110-22 கி.வோ துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் 22 கி.வோ சென்னிமலை ரோடு மின் பாதையில் புதிததாக மின் கம்பங்கள் பொருத்தும் பணி நடக்கிறது.
இதையொட்டி நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
சென்னிமலை ரோடு, கல்யாண சுந்தரம் வீதி, தொழிற்பேட்டை, பெரிய தோட்டம், விவேகானந்தர் நகர், ஆவன் கால்நடை தீவனக் கிடங்கு, எச்டி. எஸ்.சி.-1, பழைய ரெயில் நிலையம் ரோடு, கள்ளுக்கடை மேடு, ஜீவானந்தம் ரோடு, நேதாஜி ரோடு, மரப்பாலம் ரோடு, விவிசிஆர் நகர் அக்ரகாரம் வீதி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
இந்த தகவலை ஈரோடு நகரியம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பழனிவேல் தெரிவித்துள்ளார்.