ஆன்மிகம்
தூத்துக்குடி தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய விழா

தூத்துக்குடி தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய விழா கொடியேற்றம்

Published On 2021-08-31 03:46 GMT   |   Update On 2021-08-31 03:46 GMT
தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனி தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா மக்கள் பங்கேற்பு இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனி தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் பிஷப் ஜூடு பால்ராஜ் கலந்து கொண்டு அன்னையின் கொடியை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலையும், திருப்பலிகளும் மக்கள் பங்கேற்பு இன்றி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 5-ந் தேதி மாலை 6 மணிக்கு திவ்விய நற்கருணை பெருவிழா, தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் நடக்கிறது. திருவிழா நிகழ்ச்சிகள் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் யு.டியூப் சானலிலும் ஒளிபரப்பப்படுகிறது.

விழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஜெரோசின் அ.கற்றார், மற்றும் பக்த சபைகள், பங்கு பேரவையினர் இணைந்து செய்து உள்ளனர்.
Tags:    

Similar News