உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கத்தியை காட்டி பஸ் கண்டக்டரிடம் ரூ.2 ஆயிரம் வழிப்பறி

Published On 2022-01-11 10:03 GMT   |   Update On 2022-01-11 10:03 GMT
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் கத்தியை காட்டி பஸ் கண்டக்டரிடம் ரூ.2 ஆயிரம் வழிப்பறி செய்து மிட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வேலூர்:

வேலூர் வேலப்பாடி அருணாசல முதலியார் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 58). அரசு பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். 

இவர் இன்று அதிகாலை பணிக்காக வேலூர் பழைய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப் போது மேட்டுஇடையம் பட்டியை சேர்ந்த அருணாசலம் (வயது25) என்பவர் பாஸ்கரை வழிமறித்து பணம் கேட்டார்.

அவர் கொடுக்க மறுத்ததால் அருணாசலம் கத்தியை காட்டி மிரட்ட தொடங்கினார். நான் பலமுறை ஜெயிலுக்கு சென்று வந்தவன். நான் கேட்டு பணம் தர மறுக்கிறாயா என்று கூறி கத்தியால் குத்த பாய்ந்தார்.
அப்போது பாஸ்கர் விலகிக் கொண்டார். 

மேலும் கத்தி முனையில் மிரட்டிய அருணாசலம் கண்டக்டர் பாஸ்கரிடம் இருந்து ரூ.2 ஆயிரத்தை பறித்தார். போலீசில் புகார் அளித்தால் வந்து வெட்டுவேன் எனக்கூறிவிட்டு சென்று விட்டார்.

இதுகுறித்து பாஸ்கர் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் உத்தரவின்பேரில் சப்&இன்ஸ்பெக்டர் பால வெங்கட்ராமன் மற்றும் போலீசார் இன்று காலை பழைய பஸ் நிலையம் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது அவர்களிடம் பணம் பறித்த அருணாசலம் அங்குள்ள ஒரு ஓட்டல் அருகே நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் கத்திமுனையில் நகை பணம் பறிப்பது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து அருணாசலத்தை கைது செய்தனர்.
Tags:    

Similar News