செய்திகள்
ரெயில்

மைசூரு-தூத்துக்குடி ரெயில் மார்ச் 31-ந் தேதி வரை நீட்டிப்பு

Published On 2021-01-20 02:50 GMT   |   Update On 2021-01-20 02:50 GMT
மைசூரு-தூத்துக்குடி இடையே இயங்கும் சிறப்பு ரெயில் சேவை மார்ச் மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:

தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மைசூரு-தூத்துக்குடி இடையே இயங்கும் சிறப்பு ரெயில் (06236) இந்த மாதம் 31-ந் தேதி வரை இயங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரெயில் சேவை மார்ச் மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. தூத்துக்குடி-மைசூரு ரெயில் (06235) வருகிற 30-ந் தேதியுடன் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த ரெயில் சேவை ஏப்ரல் 1-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. கே.எஸ்.ஆர்.பெங்களூரு-கன்னியாகுமரி சிறப்பு ரெயில் (06526) இந்த மாதம் 31-ந் தேதி வரை இயக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த ரெயில் சேவை மார்ச் மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

கன்னியாகுமரி-கே.எஸ்.ஆர். பெங்களூரு ரெயில் (06525) பிப்ரவரி மாதம் 2-ந் தேதியுடன் நிறைவு பெறும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் தற்போது ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேற்கண்ட ரெயில்கள் உள்பட 78 ரெயில்கள் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News