ஆன்மிகம்
கார்த்திகை தீப நாளையொட்டி காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சிறப்பு பூஜை
நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டியில் உள்ள கந்தசாமி கோவிலில் கார்த்திகை தீபம் மற்றும் கிருத்திகை நாளையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.
நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டியில் பிரசித்தி பெற்ற கந்தசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை தீபம் மற்றும் கிருத்திகை நாளையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.
இதையடுத்து முருகன், வள்ளி தெய்வானையுடன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் மல்லசமுத்திரம், ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து முருகன், வள்ளி தெய்வானையுடன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் மல்லசமுத்திரம், ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.