செய்திகள்
போரூர் அருகே ஆசிட் குடித்து பெண் பலி
போரூர் அருகே ஆசிட் குடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
போரூர் அருகே அய்யப்பந்தாங்கல் சீனிவாசபுரம் கஜலட்சுமி நகரைச் சேர்ந்தவர் யசோதா (வயது 60) மனநலம் பாதிக்கப்பட்ட யசோதா கடந்த 3 ஆண்டுகளாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் மாலை அருகில் உள்ள கடைக்கு சென்ற யசோதா வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் கடையின் அருகில் யசோதா ஆசிட் குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் யதோதாவின் மகள் சாவித்திரிக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் உயிருக்கு போராடிய யசோதாவை உடனடியாக மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி யசோதா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.