உள்ளூர் செய்திகள்
நிரந்தரமாக குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்
நிரந்தரமாக குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர்:
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொத்தமல்லிமேடு பகுதியில் சுமார் 50 வீடுகள் உள்ளது. இந்த கிராமமானது தொண்டமாங்கினம், கொசூர் ஆகிய 2 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமம். இதனால் இப்பகுதி பொதுமக்களுக்க தொடமாங்கினம் ஊராட்சில் இருந்து போல்வெல் மூலம் காவேரி கூட்டு குடிநீர் வினியோகம் செய்யயப்பட்டுவந்தது.
இதையடுத்து சில காரணங்களால் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி கூட்டு குடிநீரு வினியோகம் நிறுத்தப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கலெக்டர், முதல்அமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்தனர். இதையடுத்து கொசூர் ஊராட்சியிலிருந்து கொத்தமல்லிமேடு பொதுமக்களுக்கு கிணறுகள் மூலம் குடிநீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர்.
தற்போது அங்கும் போர்வெல் மோட்டார் பழுதானதால் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் இல்லாமல் கொத்தமல்லிமேடு பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். இைதயடுத்து 2 ஊராட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் கொத்தமல்லிமேடு கிராமமக்கள் ஒன்றிய ஆணையரிடம் புகார் கொடுத்தும் இதுவரை 2 ஊராட்சிகளும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கொத்தமல்லிமேடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் வந்து தோகைமலை - பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், உதவி ஆய்வாளர் திருப்பதி, தொண்டமாங்கிணம் ஊராட்சி மன்றத்தலைவர் மகாமுனி, கொசூர் ஊராட்சி மன்ற தலைவர் லெட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்திக், சக்கரவர்த்தி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில் ஒரு வாரத்தில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் தங்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் தோகைமலை பாளையம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.