ஆட்டோமொபைல்
லெக்சஸ் எல்சி கன்வெர்டிபில்

12 மணி நேரம் உறைபனியில் நிறுத்தப்பட்ட கார் - அப்புறம் என்ன ஆனது தெரியுமா?

Published On 2021-05-31 09:27 GMT   |   Update On 2021-05-31 09:27 GMT
லெக்சஸ் நிறுவனத்தின் எல்சி கன்வெர்டிபில் மாடல் 12 மணி நேரங்கள் உறைபனியில் நிறுத்தப்பட்டு, பின் இயக்க முயற்சி செய்யப்பட்டது.


லெக்சஸ் எல்சி கன்வெர்டிபில் மாடல் நீல நிற வானம் மற்றும் சூரிய வெளிச்சத்தை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் லெக்சஸ் சோதனை ஒன்றை செய்து பார்க்க முடிவு செய்தது. 

காரின் உறுதித்தன்மையை நிரூபிக்க லெக்சஸ் மிகவும் விசித்திர சோதனையை எல்சி கன்வெர்டிபில் மாடலில் மேற்கொண்டது. அதன்படி லெக்சஸ் எல்சி கன்வெர்டிபில் 12 மணி நேரம் உறைபனியில் நிறுத்தப்பட்டது. இதற்கென தொழில்துறை நிறுவனங்களில் உள்ள கருவிகள் பயன்படுத்தப்பட்டன. 



லெக்சஸ் எல்சி கன்வெர்டிபில் மாடலில் உள்ள நான்கடுக்கு ரூப் திறக்கப்பட்ட நிலையில், உறைபனியில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக காரின் உள்புறம் முழுமையாக குளிரூட்டப்பட்டது. குளிர்ந்த நிலையில், காரின் ஹீட்டெட் சீட், ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவை இயங்கும் என லெக்சஸ் நிறுவன மூத்த பொறியாளர் தெரிவித்தார்.

உறைபனியில் இருந்து எடுக்கப்பட்டதும், கார் இயக்கப்பட்டது. இதற்கான சோதனை பகுதி அதிக வளைவுகள், உயரமான பகுதி, தாழ்வான பகுதிகளை கொண்டிருந்தது. உறைபனியில் இருந்து எடுக்கப்பட்ட பின் காரை முதல் முறை ஸ்டார்ட் செய்ததுமே, என்ஜின் ஆன் ஆனது.
Tags:    

Similar News