ஆன்மிகம்
ஆவணி கொடை விழா கால்நாட்டு நிகழ்ச்சி

மாவடி பண்ணை முத்தாரம்மன் கோவில் ஆவணி கொடை விழா கால்நாட்டு நிகழ்ச்சி

Published On 2021-09-08 04:28 GMT   |   Update On 2021-09-08 04:28 GMT
தூத்துக்குடி மாவட்டம் மாவடி பண்ணை கிராமம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான கொடை விழா வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் மாவடி பண்ணை கிராமம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி செவ்வாய் அன்று நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான கொடை விழா வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான கால்நாட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

காலை 9 மணிக்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பின்னர் அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டனர்.

அரசு அறிவித்த கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் கொடை விழா நடத்தப்படும் என்று விழா கமிட்டியார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News