ஆன்மிகம்
அய்யா வைகுண்டர்

பள்ளிப்பட்டு அய்யா வைகுண்டசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2020-11-23 08:32 GMT   |   Update On 2020-11-23 08:32 GMT
தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டு ஸ்ரீமன் நாராயணசாமி நிழல் தாங்கல் கோவிலில் உள்ள அய்யா வைகுண்டசாமிக்கு உகப்படிப்பு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அன்னதானமும், மாலையில் உகப்படிப்பும் நடைபெற்றது.
கலியுகத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பொருளும் ஒரு பொருளாக அவதரித்த அய்யா வைகுண்டசாமிக்கு கடலூர் அருகே உள்ள தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டில் ஸ்ரீமன் நாராயணசாமி நிழல் தாங்கல் என்ற பெயரில் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. அதிலும் தமிழ் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை மிகவும் விஷேமான நாள் ஆகும். அந்த வகையில் கார்த்திகை முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி காலை 7 மணியளவில் அய்யா வைகுண்டசாமிக்கு உகப்படிப்பு நடைபெற்றது. பின்னர் பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பும் அதைத் தொடர்ந்து அன்னதானமும், மாலையில் உகப்படிப்பும் நடைபெற்றது. இதில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News