உள்ளூர் செய்திகள்
சேதமடைந்த டி.வி.

உயர்மின் அழுத்த மின்சாரத்தால் 45 வீடுகளில் மின்சாதனம் பாதிப்பு

Published On 2022-04-16 09:54 GMT   |   Update On 2022-04-16 09:54 GMT
கூடங்குளம் அருகே உயர்மின் அழுத்த மின்சாரத்தால் 45 வீடுகளில் டி.வி. உள்ளிட்ட மின்சாதனம் பாதிக்கப்பட்டது.
வள்ளியூர்:

செட்டிகுளம் புதுமனை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மின்சாரவசதிக்காக அமைக்கப்பட்ட மின் வயர்கள் மின் கம்பங்களுக்கு இடையே மிகவும் தாழ்வாக  இருந்து வருகிறது.

அவ்வப்போதுகாற்று மற்றும் மழை காலங்களில் வயர்கள்ஒன்றோடு ஒன்று உரசி விபத்துகள் ஏற்படுத்தி கொண்டு இருந்தது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து இப்பகுதியில் காற்றுடன் கூடிய கோடை மழை பெய்து வருகிறது.

இதனால் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளமின்சார வயர்கள் உரசி கொண்டதால் உயர் மின்னழுத்தம் காரணமாக பல குடியிருப்பு வீடுகளில் திடீர் மின்தடைஉருவானது.

அத்துடன் பயன்பாட்டில் இருந்த சுமார் 45 வீடுகளில் பல்பு, டிவி, மிக்சி, கிரைண்டர் போன்ற மின்சாதன பொருட்கள் சேதமடைந்து குடியிருப்புவாசிகளை பாதிப்புக்கு உள்ளாக்கியது.

 மீண்டும் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக துறை ரீதியாக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என செட்டிகுளம் புதுமனை பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News