செய்திகள்
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

ஏரிகளை பகல் நேரத்தில் மட்டும் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி

Published On 2021-11-10 06:21 GMT   |   Update On 2021-11-10 06:21 GMT
தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்கள் தஞ்சை, கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு முழுவதும் 5,100 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு தேசிய பேரிடர் மீட்பு படையின் 8 குழுக்கள் கடலூர், நாகை, தஞ்சாவூர், மதுரை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு தலா ஒரு குழுவும், சென்னை மணலிக்கு 3 குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.



தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்கள் தஞ்சை, கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீச்சல் தெரிந்த 19,547 பேர், மரம் அறுக்கத்தெரிந்த 15,912 பேர், பாம்பு பிடிப்பவர்கள் 3,117 பேர், கால்நடை பாதுகாப்பிற்கு 19,535 பேர் என சுமார் 1.05 லட்சம் தன்னார்வலர்கள் கண்டறியப்பட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

நேற்று மட்டும் மழைக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். கடலில் மீன்பிடிக்க சென்ற 33,773 படகுகள் பத்திரமாக கரை சேர்ந்துள்ளன. ஏரிகளில் பகல் நேரத்தில் மட்டுமே தண்ணீரை திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், ஆணையர் நாகராஜன், மேலாண்மை இயக்குனர், சுப்பையன் உடன் இருந்தனர்.


Tags:    

Similar News