செய்திகள்
கோப்புப்படம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் உயிரிழப்பு - மொத்த பாதிப்பு 23 ஆயிரத்தை நெருங்கியது

Published On 2021-06-07 02:44 GMT   |   Update On 2021-06-07 02:44 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 22 ஆயிரத்து 688 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 18 ஆயிரத்து 539 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 22 ஆயிரத்து 688 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 18 ஆயிரத்து 539 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 144 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 64 வயது ஆண், 55 வயது பெண், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயது ஆண் ஆகியோர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 144-ல் இருந்து 147-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 1,400 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் 304 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 688-ல் இருந்து 22 ஆயிரத்து 992-ஆக உயர்ந்துள்ளது.

நொய்தொற்றால் பாதிக்கப்பட்ட 4 ஆயிரத்து 306 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News