செய்திகள்
பழனி அருகே ஓடும் காரில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி:
பழனியை சேர்ந்தவர் ரபீக் (வயது 40). இவர் நேற்று குடும்பத்துடன் தனது காரில் பழனி அருகே உள்ள கோதமங்கலத்தில் சென்று கொண்டிருந்தார். கோதமங்கலம் பகுதியில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் சென்றபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.
இதைக்கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக காரை நிறுத்தினார். பின்னர் காரில் இருந்து அனைவரும் கீழே இறங்கினர். இதற்கிடையே கார் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. அதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காரில் எரிந்த தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.