இந்தியா
தடுத்து நிறுத்தப்பட்ட பெண்கள்

குவைத் செல்ல இருந்த தமிழகம், கோவாவைச் சேர்ந்த 44 பெண்கள் தடுத்து நிறுத்தம்

Published On 2021-12-08 03:22 GMT   |   Update On 2021-12-08 03:42 GMT
இரட்டை விசா புகாரில் தமிழகம் மற்றும் கோவாவைச் சேர்ந்த 44 பெண்கள் ஐதராபாத் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
குவைத் செல்வதற்காக தமிழகம் மற்றும் கோவா மாநிலத்தை சேர்ந்த 44 பெண்கள் ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச நிலையம் வந்தனர். அதிகாரிகள் அவர்களுடைய விசாக்களை சோதனை செய்தனர்.

அப்போது, 40 பேரும் இரட்டை விசாக்கள் வைத்திருந்தது தெரியவந்தது. வேலைவாய்ப்பு மற்றும் பார்வையாளர்கள் என இரண்டு விசாக்கள் வைத்திருந்தனர். இதனால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News