செய்திகள்
தற்கொலை

பாகலூர் அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2021-10-10 14:35 GMT   |   Update On 2021-10-10 14:35 GMT
பாகலூர் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

பாகலூர் அருந்ததியர் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி வெங்கடேஷ் (வயது 46). இவர், உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லையாம். இதில் மனம் உடைந்த வெங்கடேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Tags:    

Similar News