செய்திகள்
மரணம்

பழுதான ரெயிலை சீரமைத்த ஊழியர் ரெயிலில் சிக்கி பலி

Published On 2019-11-05 07:18 GMT   |   Update On 2019-11-05 07:18 GMT
ரெயில்வே சீரமைப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர் ரெயிலில் சிக்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை கேத்தாண்டபட்டி ரெயில் நிலையம் அருகே இன்று காலை சேலம் பயணிகள் ரெயில் பழுதாகி நின்றது.

இதனை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் ஜோலார்பேட்டை புது ஓட்டல் தெருவைச் சேர்ந்த கோபிநாதன் (வயது 42) என்ஜின் மெக்கானிக். இவர் பணியில் ஈடுபட்டார்.

சேதமடைந்த பேண்டோ கம்பியை தூக்கிக் கொண்டுவந்து கொடுத்தும் அதனை பொருத்தும்பணி செய்தார். இதனையடுத்து சேலம் ரெயில் புறப்பட்டுச் சென்றது. பணி முடிந்த பிறகு தண்டவாளம் அருகில் இருந்த கோபிநாதன் அதனை கடக்க முயன்றார்.

அப்போது பெங்களூரு நோக்கி வேகமாக சென்ற லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கோபிநாதன் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

அவரது உடலை பார்த்து ரெயில்வே ஊழியர்கள் கதறி அழுதனர்.

Tags:    

Similar News