செய்திகள்
இந்திராணி

மும்பை பெண்கள் சிறையில் இந்திராணி உள்பட 40 கைதிகளுக்கு கொரோனா

Published On 2021-04-22 00:36 GMT   |   Update On 2021-04-22 00:36 GMT
கொரோனா தொற்று காரணமாக இந்திராணி உள்பட 40 பெண் கைதிகளையும் பைகுல்லாவில் உள்ள பட்டான்கர் பள்ளியில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மும்பை:

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் முன்னாள் மனைவியான இந்திராணி தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து மும்பை பைகுல்லாவில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அண்மையில் அந்த சிறையில் நடந்த கொரோனா பரிசோதனையில் இந்திராணி உள்பட சுமார் 40 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடு்த்து இந்திராணி உள்பட 40 பெண் கைதிகளையும் பைகுல்லாவில் உள்ள பட்டான்கர் பள்ளியில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News