ஆன்மிகம்
முனியப்பன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜை

முனியப்பன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜை

Published On 2021-07-27 04:58 GMT   |   Update On 2021-07-27 04:58 GMT
செல்லாக்கவுண்டம்பட்டி முனியப்பன் கோவில் ஆடி மாத சிறப்பு பூஜையில் பக்தர்கள் கிடா, கோழிகளை வெட்டி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தோகைமலை அருகே செல்லாக்கவுண்டம்பட்டியில் பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டும் தோறும் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் இந்தாண்டும் நேற்று ஆடி மாத சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் கிடா, கோழிகளை வெட்டி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News