செய்திகள்
சாமல்பட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
சாமல்பட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லாவி:
சாமல்பட்டி அருகே கல்குமாரம்பட்டி பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று சூதாடிக்கொண்டு இருந்த அதே கிராமத்தை சேர்ந்த குமார், காமலாபுரத்தை சேர்ந்த சகாதேவன், அய்யம்பட்டியை சேர்ந்த வெங்கடேசன், சின்னகுன்னத்தூரை சேர்ந்த பாபு ஆகிய 4 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.17,780 பறிமுதல் செய்யப்பட்டது.