பெருந்துறை அருகே ஆட்டோ தீ வைத்து எரிப்பு - 3 பேர் மீது வழக்கு பதிவு
பெருந்துறை:
பெருந்துறை அடுத்து உள்ள திங்களூர் பிரப் நகரை சேர்ந்தவர் ரிச்சர்டு (வயது42).
இவர் பெருந்துறை அடுத்த சானேட்டேரியம் மருத்துவ கல்லூரி பகுதியில் உள்ள ஒரு ஆட்டோ ஸ்டேண்டில் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார்.
இதில் அந்த ஸ்டேண்டில் உள்ள மற்ற ஆட்டோ டிரைவர்கள் வரிசையாக போகாமல் முன் கூட்டியே சென்றதாக கூறப்படுகிறது.
இதை ரிச்சர்டு கண்டித்தார். அப்போது அவர்களுடையே வாய் தகராறு ஏற்பட்டது. வாக்கு வாதமும் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் ரிச்சர்டு ஆட்டோவுக்கு தீ வைத்தனர்.இதில் அந்த ஆட்டோ தீ பிடித்து எரிந்தது. ஆட்டோவின் முன் பகுதி மற்றும் இருக்கை என முக்கால்வாசி எரிந்து சேதமானது.
இது குறித்து ரிச்சர்டு பெருந்துறை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதே பகுதியை சேர்ந்த மெல்வின் (29), விஜய பாஸ்கர், மாத்யூ ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.