செய்திகள்
நான்கு விமான நிறுவனம் மீது எஃப்.ஐ,ஆர். பதிவு செய்த டெல்லி அரசு
விமானத்தில் வரும் பயணிகளிடம் கொரோனா சான்றிதழை சரியாக கையாளவில்லை என்பதால் டெல்லி அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் சில மாநிலங்கள் விமானப் பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
டெல்லி அரசு மகாராஷ்டிராவில் இருந்து டெல்லிக்கு வரும் விமானங்கள், பயணிகளை ஏற்றும்போது ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதில் நெகட்டிவ் முடிவு சான்றிதழ் கட்டாயம் என்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இதை சரியாக செய்யவில்லை என குற்றம்சாட்டிய டெல்லி அரசு இண்டிகோ, விஸ்டாரா, ஸ்பைஸ்ஜெட், ஏர்ஆசியா ஆகிய விமான நிறுவனங்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.