ஆன்மிகம்
ரிஷப வாகனத்தில் அம்மன் வீதிஉலா

நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா: ரிஷப வாகனத்தில் அம்மன் வீதிஉலா

Published On 2021-03-25 04:16 GMT   |   Update On 2021-03-25 04:16 GMT
நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நிலக்கோட்டையில் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது, இங்கு பங்குனி மாத திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

விழாவையொட்டி கடந்த 21-ந்தேதி அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார். அப்போது அக்னிச்சட்டி, மாவிளக்கு, முளைப்பாரி, பால்குடம் எடுத்தும், அலகு குத்தி வந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்தநிலையில் திருவிழாவின் 10-ம் நாளான நேற்று முன்தினம் இரவு அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News