செய்திகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 614 பேர் இறந்துள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 614 பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று கொரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை. இதற்கிடையே நேற்று 6 பெண்கள் உள்பட மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 31 ஆயிரத்து 932 ஆனது. அதேநேரம் 24 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 224 பேர் சிகிச்சையில் உள்ளனர்.