ஆன்மிகம்
திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை
திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோவில் மாசி மகப்பெருவிழாவில் பெருமாள் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை வீதி உலா புறப்பாடு நடந்தது.
திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி மகப்பெருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 4-ந் தேதிவரை நடக்கிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை, பெருமாள் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை வீதி உலா புறப்பாடு நடந்தது.
இரவு தங்க கருட சேவை நடந்தது. இதில் பெருமாள் தங்க கருட வாகனத்துடன் கூடிய ஓலை சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது..
இரவு தங்க கருட சேவை நடந்தது. இதில் பெருமாள் தங்க கருட வாகனத்துடன் கூடிய ஓலை சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது..