செய்திகள்
கோப்பு படம்.

அரியலூரில் ஒரேநாளில் 22 பேருக்கு கொரோனா

Published On 2021-04-17 10:33 GMT   |   Update On 2021-04-17 10:33 GMT
அரியலூரில் ஒரேநாளில் 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. பெரம்பலூரில் 14 பேர் பாதிக்கப்பட்டனர்.
பெரம்பலூர்:

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 22 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,036 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கனவே 49 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 4,824 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 163 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 14 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,384 ஆக உயர்ந்துள்ளது. இதில் 22 பேர் ஏற்கனவே உயரிழந்துள்ளனர். 2,309 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 53 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News