செய்திகள்
தமிழக அரசு.

அதிகரிக்கும் கொரோனா- சென்னையில் 15 சிறப்பு குழுக்கள் அமைப்பு

Published On 2021-04-08 14:41 GMT   |   Update On 2021-04-08 15:55 GMT
சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக 15 சிறப்பு குழுக்களை அமைத்து தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பானது அதிகரிக்கத் துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மேலும் 4,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது,

மேலும் அதிக பாதிப்புகளை பதிவு செய்து வரும் சென்னையில் மட்டும் 15 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News