ஆட்டோமொபைல்
ஸ்கோடா ரேபிட்

ஸ்கோடா ரேபிட் 1.0 டிஎஸ்ஐ புது வேரியண்ட் அறிமுகம்

Published On 2020-08-29 08:21 GMT   |   Update On 2020-08-29 08:21 GMT
ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் புதிய ரேபிட் 1.0 டிஎஸ்ஐ ஆட்டோமேடிக் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் புதிய ரேபிட் 1.0 டிஎஸ்ஐ ஆட்டோமேடிக் வேரியண்ட் மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. இந்த கார் விற்பனை வரும் வாரங்களில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோடா ரேபிட் 1.0 டிஎஸ்ஐ ஆட்டோமேடிக் மாடலுக்கான முன்பதிவு இந்தியா முழுக்க அனைத்து விற்பனையகம் மற்றும் ஆன்லைனில் நடைபெறுகிறது. புதிய ஸ்கோடா காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.



ஸ்கோடா ரேபிட் 1.0 டிஎஸ்ஐ ஆட்டோமேடிக் வேரியண்ட் 999சிசி மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 108 பிஹெச்பி பவர், 175 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது.

புதிய ஸ்கோடா ஆட்டோமேடிக் வெர்ஷன் லிட்டருக்கு 16.24 கிலோமீட்டர் வரை செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் தவிர புதிய செடான் மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. முன்னதாக ஸ்கோடா ரேபிட் 1.0 டிஎஸ்ஐ மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
Tags:    

Similar News