செய்திகள்
மதிமுகவில் வைகோ மகன் துரை வைகோவுக்கு பதவி
என் மகன் துரை வைகோவுக்கு கட்சியில் பதவி வழங்கியிருப்பது வாரிசு அரசியல் இல்லை என வைகோ தெரிவித்தார்.
சென்னை:
மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளரான வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சியில் பதவி வழங்குவது தொடர்பாக, இக்கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 106 பேர் வாக்களித்தனர். இதில் 104 பேர் துரைக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து, துரைக்கு தலைமைக் கழக செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுபற்றி வைகோ பேசுகையில், ‘எனக்கு விருப்பமில்லாமல் தான் இருந்தேன், தொண்டர்கள் தான் அவரை கட்சிக்குள் இழுத்தனர். என் மகன் துரை வைகோவுக்கு கட்சியில் பதவி வழங்கியிருப்பது வாரிசு அரசியல் இல்லை. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தி பதவி வழங்கப்பட்டுள்ளது. இனி முழு நேர கட்சி பணிகளை துரை கவனிப்பார்’ என்றார்.