உள்ளூர் செய்திகள்
மரணம்

மதுரவாயல் அருகே படிக்கட்டில் தவறி விழுந்து பெண் பலி

Published On 2022-01-29 06:50 GMT   |   Update On 2022-01-29 06:50 GMT
மதுரவாயல் அருகே படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:

மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் ராஜீவ்காந்தி காந்தி நகரை சேர்ந்தவர் காஜாவலி. இவரது மனைவி காஜாபீ (68).

இவர் நேற்று மாலை முதல் மாடியில் இருந்து படிக்கட்டில் இறங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்தார். தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்த காஜாபீயை அவரது குடும்பத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News