செய்திகள்
பா.ம.க.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டி

Published On 2021-09-14 17:14 GMT   |   Update On 2021-09-14 17:14 GMT
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பா.ம.க. இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் பா.ம.க. அதிமுக-வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. இதனால் உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக உடன் கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார். மேலும், வருகிற 15 மற்றும் 16-ந்தேதி விருப்பமனுக்கள் பெறப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News