ஆன்மிகம்
எமதர்மனின் விருப்பத்தை நிறைவேற்றிய அம்பிகை
நீதி, நேர்மை தவறாமல் சத்தியத்தை கடைப்பிடிக்கும் மனோபலம் பெறுவதற்காக, கடும் தவம் செய்த, எமதர்மனின் விருப்பத்தை ஆதிபராசக்தி நிறைவேற்றிய வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மார்க்கண்டேயனின் உயிரைக் கவர எம தர்மன் சென்றபோது, அவன் சிவலிங்கத்தைக் கட்டிக்கொள்கிறான். அப்போது எமன் வீசிய பாசக்கயிறு, சிவபெருமான் மீதும் விழுந்தது. கோபமடைந்த சிவபெருமான் எமதர்மனை இடது காலால் உதைத்து தண்டித்ததுடன், மார்க்கண்டேயனுக்கு ‘எப்போதுமே பதினாறு வயதுதான்’ என்றும் அருள்புரிந்தார். சிவபெருமான் கோபத்தில் காலனை காலால் உதைத்த சம்பவத்திற்கு பின்னால், ஒரு உட்பொருள் இருக்கிறது.
அதாவது, நீதி, நேர்மை தவறாமல் சத்தியத்தை கடைப்பிடிக்கும் மனோபலம் பெறுவதற்காக, ஆதிபராசக்தியைக் குறித்து கடும் தவம் செய்தார், எமதர்மன். அவர் முன்பாக தோன்றிய அம்பிகையிடம், “தாயே! தங்கள் திருவடி, என் மார்பின் மீது பட வேண்டும்” என்று வேண்டினார்.
“தக்க சமயத்தில் உன் விருப்பம் நிறைவேறும்” என்று அருளாசி கூறி மறைந்தாள் அம்பிகை.
மார்க்கண்டேயனுக்கு அருள்புரிந்த வேளையில், எமதர்மனை தனது இடது காலால் உதைத்தார் சிவபெருமான். அர்த்தநாரீஸ்வரராக இருக்கும் ஈசனின் இடப்பாகம் ஆதிபராசக்தி என்ற நிலையில், சிவனின் இடது கால் பகுதி அன்னையின் திருவடியாகவே பார்க்கப்படுகிறது. எனவே எமதர்மனின் விருப்பப்படி, அம்பிகையின் திருவடி அவரது மார்பில் பதிந்தது.
அதாவது, நீதி, நேர்மை தவறாமல் சத்தியத்தை கடைப்பிடிக்கும் மனோபலம் பெறுவதற்காக, ஆதிபராசக்தியைக் குறித்து கடும் தவம் செய்தார், எமதர்மன். அவர் முன்பாக தோன்றிய அம்பிகையிடம், “தாயே! தங்கள் திருவடி, என் மார்பின் மீது பட வேண்டும்” என்று வேண்டினார்.
“தக்க சமயத்தில் உன் விருப்பம் நிறைவேறும்” என்று அருளாசி கூறி மறைந்தாள் அம்பிகை.
மார்க்கண்டேயனுக்கு அருள்புரிந்த வேளையில், எமதர்மனை தனது இடது காலால் உதைத்தார் சிவபெருமான். அர்த்தநாரீஸ்வரராக இருக்கும் ஈசனின் இடப்பாகம் ஆதிபராசக்தி என்ற நிலையில், சிவனின் இடது கால் பகுதி அன்னையின் திருவடியாகவே பார்க்கப்படுகிறது. எனவே எமதர்மனின் விருப்பப்படி, அம்பிகையின் திருவடி அவரது மார்பில் பதிந்தது.