செய்திகள்
கைது

தஞ்சை அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது

Published On 2020-11-03 09:55 GMT   |   Update On 2020-11-03 09:55 GMT
தஞ்சை அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சையை அடுத்த மாரியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகம்படும்படி நின்ற 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(வயது34), சோலைராஜா(36), சிங்கபெருமாள் குளம் பகுதியை சேர்ந்த சூர்யபிரகாஷ் (21) ஆகியோர் என்பதும், இவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News