செய்திகள்
முககவசம் அணியாத 303 பேருக்கு அபராதம்
நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணியாத 303 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முககவசம் அணியாமல் சுற்றித்திரியும் நபர்கள் மற்றும் பொது இடங்களில் எச்சில் துப்பும் நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். அந்தவகையில் நேற்று முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 303 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.60 ஆயிரத்து 600 அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதேபோல் பொதுஇடங்களில் எச்சில் துப்பிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ 4 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.