ஆன்மிகம்
சுசீந்திரம் கோவில்

சுசீந்திரம் கோவிலில் சித்திரை விஷூ கனி காணல் நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Published On 2021-04-12 09:18 GMT   |   Update On 2021-04-12 09:18 GMT
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை விஷூ கனிகாணல் நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவதையொட்டி தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறையும் கோவில்களில் பக்தர்களை அனுமதிப்பது குறித்தும், பூஜை மற்றும் வழிபாடுகள் குறித்தும் அனைத்து கோவில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதை தொடர்ந்து குமரி மாவட்ட கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள 490 கோவில்களுக்கும் இணை ஆணையர் அலுவலகத்தில் இருந்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். கைகளை சுத்தம் செய்த பின்னரே கோவிலுக்குள் செல்ல வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கோவிலுக்குள் ஒரே நேரத்தில் 20 பக்தர்கள் மட்டுமே அனுமதிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

பூஜை நேரத்தில் பக்தர்கள் அனுமதி மறுக்கப்படுவது, அர்ச்சனை மற்றும் வழிபாடுகள் நடத்த தடை விதித்ததுடன், கோவிலுக்கு உள்ளே பணியாளர்களை கொண்டு வாகன பவனி நடத்துவதும், கோவில் வெளிப்பிரகாரத்தில் வாகன பவனி நடத்த அனுமதி மறுப்பது, திருவிழாக்கள் நடத்த அனுமதி ரத்து என பல்வேறு தகவல்களை சுற்றறிக்கையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

அந்த வகையில் குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் வருகிற 14-ந் தேதி சித்திரை விஷூ கனி காணல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் தாணுமாலய சாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு, பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க குடங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் சித்திரை விஷூ கனிகாணல் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காலை 7 மணிக்கு பிற்பாடு பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிப்பது, சாமி தரிசனம் செய்ய வேண்டிய வசதியை கோவில் நிர்வாகம் செய்து கொடுக்கும். மேலும் பக்தர்கள் கூட்டமாகச் செல்லாமல் சமூக இடைவெளியை கடைப்பிடித்து செல்ல கோவில் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதே போன்று மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், வேளிமலை முருகன் கோவில் உள்பட பல கோவில்களில் சித்திரை விஷூ கனி காணல் நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News