செய்திகள்
மார்கிராம்

விரக்தியில் மணிக்கட்டை உடைத்துக் கொண்ட தென்ஆப்பிரிக்க வீரர்: 3-வது டெஸ்டில் இருந்து விலகல்

Published On 2019-10-17 10:16 GMT   |   Update On 2019-10-17 10:16 GMT
தென்ஆப்பிரிக்கா அணியின் தொடக்க பேட்ஸ்மேன் மார்கிராம், தோல்வியின் விரக்தியில் மணிக்கட்டை உடைத்துக் கொண்டதால் 3-வது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மார்கிராம் தொடக்க வீரராக களம் இறங்கினார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 5 மற்றும் 39 ரன்கள் அடித்தார்.

புனேயில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இரு இன்னிங்சிலும் டக்அவுட் ஆனார். இதனால் விரக்தியடைந்த மார்கிராம், திடப்பொருள் மீது கோபத்தில் குத்தியதாக தெரிகிறது. இதில் அவரது மணிக்கட்டு எலும்பில் முறிவு ஏற்பட்டது.



3-வது டெஸ்ட் சனிக்கிழமை ராஞ்சியில் நடக்கிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன் அவரது காயம் குணம் அடைய வாய்ப்பு இல்லை என்பதால் 3-வது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மார்கிராம் நீக்கப்பட்டாலும் அவருக்குப் பதிலாக மாற்று வீரர் சேர்க்கப்படவில்லை.
Tags:    

Similar News