செய்திகள்
கால்பந்து விளையாட்டில் ஷாகிப் அல் ஹசன்: அவரது அணி வெற்றி
கிரிக்கெட்டில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், வங்காளதேச அணியின் முன்னாள் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் கால்பந்துக்கு மாறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் வங்காளதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன். இந்திய தொடருக்கு முன்பாக ஐசிசி அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதித்தது.
சூதாட்டக்காரர்கள் அவரை அணுகிய செய்தியை ஐசிசி ஊழல் தடுப்புக்குழுவிற்கு தெரிவிக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனால் கிரிக்கெட் விளையாட முடியாமல் இருந்த ஷாகிப் அல் ஹசன், கால்பந்து விளையாட்டுக்கு மாறியுள்ளார்.
ஷாகிப் ஃபூட்டி ஹேக்ஸ் அணிக்காக விளையாடினார். ஷாகிப் இடம் பிடித்திருந்த ஃபூட்டி ஹேக்ஸ் கொரியன் எக்ஸ்பாட் அணியை 3-2 வீழ்த்தியது.