செய்திகள்
கொள்ளை

மதுரை காண்டிராக்டர் வீட்டில் வைர, தங்க நகைகள் திருட்டு

Published On 2021-01-12 14:48 GMT   |   Update On 2021-01-12 14:48 GMT
மதுரை காண்டிராக்டர் வீட்டில் வைர, தங்க நகைகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை கோமதிபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 54) , கட்டிட காண்டிராக்டர். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு மகள் வீட்டிற்கு பொங்கல் சீர் கொடுக்க சென்றுள்ளார். திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கு பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க சங்கிலி, வைர தோடு, 340 கிராம் வெள்ளி பொருட்கள், பணம் உள்பட பல்வேறு பொருட்கள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News